ஜம்மு பேபி!!

அமெரிக்கப் புலனாய்வுத்துறை (FBI) மிகப்பெரிய அளவில் உயிரளவீட்டுத் (Biometric) தகவல்ளைத் தயாரிக்க முயற்சி எடுத்து செயலிலும் இறங்கியிருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட மனிதனின் வெவ்வேறு பண்புகளையும் விலாவாரியாகக் கொண்டிருக்கும் எனத்தெரிகிறது. உலகளாவிய இந்தத் தகவல் சேகரிப்பு பல நாடுகளின் சட்ட ஒழுங்கு அமைப்புக்களுக்கு உதவும் எனத்தெரிகிறது.
ஒவ்வொருவரின் முக மின்னணுப் பதிப்புக்கள், கைரேகைகள், முகத் அமைப்பு, முகத்திலுள்ள கீறல்கள், கண்ணின் கருவிழி பதிவுகள், அவர்கள் எப்படி நடக்கிறார்கள் மேலும் அவர்களின் இயல்பான செயல்பாடுகள் முதலான தகவல்கள் அதில் இடம்பெறும். இதை வைத்து பெருகிவரும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரை உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கட்டுக்குள் கொண்டுவரலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன! மேலும் பல சூடான செய்திகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்: வாஷிங்டன் போஸ்ட்





