யாஹூவை விலைபேசியாச்சு!

இணைய வல்லவனாக ஒருகாலத்தில் முதன்மையானவனாகத் திகழ்ந்த யாஹூ வை மென்பொருள் வல்லவன் மைக்ரோசாஃப்ட் விலை பேசியுள்ளது! அதன் விலையில் ஒன்பது மடங்கு அதிகமாகத் தந்து (44.6 பில்லியன் டாலர்) அந்த நிறுவனத்தை வாங்கிக்கொள்ள அறிவிப்பு செய்துள்ளது. அதற்கான காரணமும் உண்டு. யாஹுவையும் எம்.எஸ்.என்.ஐயும் இணைப்பதன் மூலமும் கூகுளையும் மிஞ்சிவிடலாம் என்ற கணக்கில் மைக்ரோசாஃப்ட் யோசிக்கிறது. மைக்ரோசாஃப்ட்டின் 2009க்கான முன்னோட்ட வருமானத்தின் 21 மடங்கை கூகுள் இப்போதே சம்பாதித்துக் கொண்டுள்ளது. யாஹூ மற்றும் எம்.எஸ்.என். இணைப்பு மூலம் 23 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டமுடியும் அதனால் இந்த அதிகவிலை பரவாயில்லை என்று சொல்கிறது மைக்ரோசாஃப்ட். கொஞ்சம் அதிகம்தான். ஏன் என்றால் மின்னஞ்சல் சேவை தவிர சொல்லிக்கொள்ள அதில் ஒன்றுமில்லை! அதுவும் யாஹூவின் மின்னஞ்சல் சேவை வர வர மாமியாள் கதைதான் இதற்குப்போய் இவ்வளவு காசா என்று யோசித்தால் அதில் மிஞ்சுவது காலகாலமாய் இருக்கும் யாஹூவின் வாடிக்கையாளர்கள்தான் மதிப்பு மிகுந்தவர்கள் என்பது விளங்கும். வேறென்ன இதில் சொல்ல!
உருளைக் கிழங்கிலிருந்து மின்சாரம்தயாரித்து அதில் ஒரு உள்ளமைக்கப்பட்ட (Embedded) இணைய சர்வரைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். PIC16F876 எனும் நுண் சில்லை (Microchip)க் கொண்டு 76.8 கிலோ ஹெட்ஸில், 1.5 வோல்ட் மின்சாரத்தில் இயங்கக் கூடிய (0.00002 வாட்கள்) இணைய சர்வர் இது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் தன் நிலையை மறுபதிப்பு (Refresh) செய்யக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.உருளைக்கிழங்கு இணைய சர்வர்

இதில் உருளைக் கிழங்கு மின்கலன்களை எப்போதெல்லாம் மாற்றவேண்டும் என்றும் கணித்திருக்கிறார்கள்…

No comments:
Post a Comment